நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
| வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
|---|---|---|---|
| 19. | திருவுருமலை | 10 | |
| பலன் | அடியவர் நெறி நின்று அருள் பெற வேண்டுமா?
|
||
திருவுருமலை
பாடல் - திருவுருமலை
பண் - பஞ்சமம்; தேவாரப் பாடல் - தானெனை முன்படைத்தான்
இராகம் - ஆகிரி;
தாளம் - ரூபகம்
நாகர்க ளலக்கண் டீர்த்துநல் லறுவர்
நலம்பெற வருளிய விறைவா
சூகர மதனை நசித்துல கனைத்துஞ்
சுகப்பட வருளிய வீரா
தாகமாய் வலிப்போர்க் கினியதண் மழையைத்
தருமருட் கதம்பமே யமுத
சாகர மேயா டிருவுரு மலைவாழ்
சண்முகப் பெரும்பரம் பொருளே. .. 1
எங்கணு மருள்சா னெறிசிறந் திடுமா
றிறைவனுஞ் சீடபா வந்தான்
அங்கமாக் கொளுங்கா லவற்குமோர் குருவென்
றாயினை யகத்தியன் முதனல்
புங்கவர் பலர்க்கு மருளினை யிதுநாள்
புரையுடை நான்கடைத் தேறச்
சங்க்ரகித் துரைத்தாய் திருவுரு மலைவாழ்
சண்முகப் பெரும்பரம் பொருளே. .. 2
பொய்யனே னெனினும் புலையனே னெனினும்
புரையறு கொலைஞனே னெனினும்
ஐயனே யுனக்கே யடைக்கல மானே
னாதலி னெனைக்கழி யாமல்
உய்யவே புரத்தல் கடமையுன் னடியே
னுளத்திடை யளவற வெழுமா
சையெலா மறுத்தா டிருவுரு மலைவாழ்
சண்முகப் பெரும்பரம் பொருளே. .. 3
பெண்பதி யறுத்த கரத்தினை வளர்த்தாய்
பேசிடுஞ் செயலொழிந் திருந்த
பண்புடைக் குமர குருபரன் யாப்புப்
படித்திட வருளினை மதுரைத்
திண்புதர் தலைவ னுறுமஞ ரொழித்தாய்
சிறியனேன் மனுவிற்கு மிரங்கித்
தண்பத மளித்தா டிருவுரு மலைவாழ்
சண்முகப் பெரும்பரம் பொருளே. .. 4
வி¡ரிதிரைத் திருச்சா னவியழைத் தவன்பேர்
வேந்தனின் பகைவலி கடிந்தாய்
எரிமகத் தகரைப் பாரியென வேகொண்
டெறுழ்முனி வரர்துனி யொழித்தாய்
பாரிமுகத் தொருத்திக் கெழின்முக மீ
பத்தனேன் மனுவிற்கு மிரங்கித்
தாரிசனங் கொடுத்தா டிருவுரு மலைவாழ்
சண்முகப் பெரும்பரம் பொருளே. .. 5
மிகுபலத் தனுசோ ருயிர்குடித் திடுநே
மியினையன் றாரிக்களித் தவனும்
சிகுமுயிர்த் தொகைசேர் நிரயமன் னவனைச்
சிதைத்துயி ரளித்தமுக் கணனும்
திகழ்மதி யிடர்தீர்த் தவனுநீ யேயிச்
சிறியனேன் மனுவினுக் கிரங்கித்
தகுதிரு வளித்தா டிருவுரு மலைவாழ்
சண்முகப் பெரும்பரம் பொருளே. .. 6
நண்ணிய வோர்மயி லினுக்குமஞ் சிகிக்கு
நாளுநற் றிருவடி கொடுத்துக்
கண்ணில கொருகே கயஞ்சிகி தனைமுற்
கருதிய வணம்பாரி கொடியாப்
பண்ணிய பரனே பரமபுங் கவனே
பத்தனேன் மனுவிற்கு மிரங்கித்
தண்ணளி யளித்தா டிருவுரு மலைவாழ்
சண்முகப் பெரும்பரம் பொருளே. .. 7
செயிருறு வோர்க ளலக்கணைத் தீர்ப்போய்
சேவடித் தொழும்பரைக் காப்போய்
குயிலுமிவ் வேழை மனுவினுக் கிரங்கிக்
கொடுதினங் குளிர்ந்ததண் ணளியைக்
கயல்விழிக் காந்தி மதியுட னரனுங்
களிகெழு துர்க்கையு மேவுந்
தயவுடை நெல்லைத் திருவுரு மலைவாழ்
சண்முகப் பெரும்பரம் பொருளே. .. 8
செயிருறு வோர்க ளலக்கணைத் தீர்ப்போய்
சேவடித் தொழும்பரைக் காப்போய்
குயிலுமிவ் வேழை மனுவினுக் கிரங்கிக்
கொடுதினங் குளிர்ந்ததண் ணளியைக்
கயல்விழிக் காந்தி மதியுட னரனுங்
களிகெழு துர்க்கையு மேவுந்
தயவுடை நெல்லைத் திருவுரு மலைவாழ்
சண்முகப் பெரும்பரம் பொருளே. .. 9
வாலுளக் குறமா னினிமதர்ச் சுரமா
மடவரன் மாமணத் தலைவா
வேலுடைச் சயத்தோய் விரைத்தொடைப் புயத்தோய்
வியன்புகழ் நொடித்தவன் பரனே
தோலுயர் வறுசொல் லுடையெளி யேனின்
றுயர்வலி கடிந்துநற் சுகமே
சாலுமா றருளாய் திருவுரு மலைவாழ்
சண்முகப் பெரும்பரம் பொருளே. .. 10

Pamban Swamigal Tiruppaliezhuchi Trust Document (Reg no: 98/2024)