நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
| வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
|---|---|---|---|
| 41. | பிரப்பன்வலசை | 10 | |
| பலன் | தவமும், தெய்வ தரிசனம் பெற வேண்டுமா?
|
||
பிரப்பன்வலசை
பாடல் - பிரப்பன்வலசை
பண் - சாதாரி
தேவாரப்பண் - வானவர்கள் தானவர்கள்
இராகம் - பந்துவராளி
பூமக ளியங்குலகி னல்லதமிழ் நாவலர் புலம்பு கவிதைத்
தாமமணி நடங்கடவு ளென்னுமுரு கையரடி தன்னை யெணியே
நாமுன மிருந்தவள மேகிளர் நயப்புள பிரப்பன் வலசை
ஆமிதனை நண்ணுபவ ரன்புடைய ராவர்பழி யஞ்சு மனதே. .. 1
தொண்டரக நின்றுநிமிர் கின்றவரு ளின்பாரிவு சொந்த முறவென்
றண்டரலர் கொண்டுபுசி தம்புரிய மாதிமுரு கைய ரருணாங்
கொண்டுசில வைகல்வதி தந்தவிட மென்றுயர்வு கூறு மடர்பூ
வண்டறை பிரப்பன்வல சைப்பதி யிதாகுமெனுண் மல்கு மனதே. .. 2
மெய்யடிக ணெஞ்சக மிருந்துவிளை யாடியருண் மெய்ய ரெனுநம்
ஐயடிக ளாமுருக வேளடி நினைந்துதனி யாகி யளிநீர்
பெய்யிருகண் மூடியுளி ருந்துணர்வு கொண்டவொர் பிரப்பன் வலசைச்
செய்யபதி யீதறிதி மெய்யறிவை நாடிடு திறத்த மனதே. .. 3
சீதமதி யைச்சடையில் வைத்துமலர் வாளியுடறீய விழிசெய்
ஆதியிறை யாயகுரு சாமியெனு நம்பரனை யன்று கருதி
ஓதுமொழி விட்டக மொடுங்குநிலை கண்டவிட மென்று குயிலுங்
கோதறு பிரப்பன்வல சைப்பதி யிதாமுறுதி கொண்ட மனதே. .. 4
தஞ்சமென நிற்பவர்க ளஞ்சன்மி னெனச்சொலுரை தந்த ருள்புரி
நஞ்சிவ பிரானெனு மயூரமுரு கையரடி நண்ணி யுழலும்
நெஞ்சினை யொடுக்கியிர வும்பகலு நின்றவன முள்ள வளமே
விஞ்சிய பிரப்பன்வல சைப்பதி யிதாமடமை விட்ட மனதே. .. 5
அங்குலிக மம்பவள மென்பன வணங்கதர முங்க ருமைசால்
கங்குலினும் விஞ்சுகுழ லுந்திகழ்தெய் வானைபொரு கான வர்சுதை
தங்களொரு கொண்கனெனு நங்கடவு ணன்னினைவு தந்த தகைமை
இங்கென விளம்பிடு பிரப்பன்வல சைக்களாரி யீதென் மனதே. .. 6
உள்ளபடி யுன்னுபவ ருள்ளபடி யுய்யவென வுன்னு பொரிய
வள்ளன்முரு கையர்நடு நிற்குநிலை யைச்சொலி மறைந்த விடமும்
வெள்ளைகிளர் புட்டுயி லெழுப்புகடல் வெள்ளலைகள் வீசு வளமும்
உள்ளவொர் பிரப்பன்வல சைப்பதி யிதேயுலகை யுந்து மனதே. .. 7
மித்தைபடு வாழ்வினை விடுத்துநி வாழ்வினில் விளங்க நமையே
சுத்தமுறு கோவண முடன்றிரிய விட்டவொர் சுரேச ரடிசேர்
பத்தருயர் பூசனை புரிந்துவதி பண்புறு பிரப்பன் வலசை
இத்தலம தாமறிதி வைத்தநிலை நிற்குமென தேசின் மனதே. .. 8
துன்றுமறு பொன்மவுலி யெண்டிசையு மின்னவதி சுந்த ரமலி
பொன்றொடையல் கிம்புரி வயங்குமெழின் மொய்புடைய பூரண ரருள்
ஒன்றைநனி யுன்னியுளொ டுங்குணர்வு கண்டவொர் பிரப்பன் வலசை
சென்றவ ரிருந்தவரு மன்புடைய ராவரறி தெய்வ மனதே .. 9
நாடறிய தெய்வமென வேமறைசொ லாறுமுக னஞ்சி வனெனாப்
பாடல்பல பாடியவொர் சோணகிரி கண்டவிரு பத்ம வடியைக்
கூடவென நாமினிது கொண்டநடை கட்குதவி செய்த சுகுர்தர்
பீடணவி வாழிது பிரப்பன்வல சைப்பதி பிடித்த மனதே .. 10

Pamban Swamigal Tiruppaliezhuchi Trust Document (Reg no: 98/2024)