நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
| வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
|---|---|---|---|
| 47. | பூரணப்பொருள் | 10 | |
| பலன் | கலை ஞானம் பெற வேண்டுமா?
|
||
பூரணப்பொருள்
பாடல் - பூரணப்பொருள்
பண் - கொல்லி
தேவாரப்பண் - மண்ணில் நல்ல
இராகம் - நெளரோ
தாளம் - ரூபகம்
வேதத்தி னீறும் யாணர் மேயதந் திரத்தி னீறும்
போதத்தி னீறு ஞாலம் புகழ்பெரு யோகத் தீறும்
நாதத்தி னீறு ஞாட்புக் கலையுடை யீறு மென்றன்
போதத்தைக் கவர்சே யாமோர் பூரணப் பொருளே யன்றே. .. 1
தன்னுடை யியற்கை யாகத் தயங்கரு ளாகும் யானைக்
கென்னுடை நினைப்பி யாவுங் கவளமா வீந்து பற்றும்
மன்னுடை யிறையா யென்னுண் மறைந்திருந் தாட்டு வானாய்ப்
பொன்னுடைச் சேயாய் நிற்போன் பூரணப் பொருளே யன்றே. .. 2
அறிவற்ற சடத்தி னுள்ளே யழிவற்ற பொருளாய் மேலோர்
அறிவித்தா லறியு மாவி யானதைச் சதசத் தென்னா
வறிதற்ற வாக மங்கள் வழுத்துதல் பொருந்து மென்று
பொறிபற்ற வுணர்த்துஞ் சேயோன் பூரணப் பொருளே யன்றே. .. 3
நந்தலின் றிருத்த லானு ஞானமாய் விளங்க லானும்
சுந்தர வேதஞ் சத்தாய்த் துலங்கிடு சித்தா யோதும்
அந்தர மாத்து மாவிற் சுமையுமென் றழுத்த மாகப்
புந்தியி லுணர்த்துஞ் சேயோன் பூரணப் பொருளே யன்றே. .. 4
பாசம நினைவிற் குள்ளே பரநினை வமிழ்ந்து நிற்கும்
பாசமா நினைவை நீக்கிப் பரநினை வாலே யந்த
ஈசனை யறிதன் ஞான விளக்கம தென்று தேவ
பூசனை யுணர்த்துஞ் சேயோன் பூரணப் பொருளே யன்றே. .. 5
தரணிவாழ் கம்பக் கூத்தர் தாஞ்செயுந் திறம்போ லந்தப்
பரநினை வதனிற் பாதி பரத்திலே யிருக்கப் பாதி
பரவினை யதனைச் செய்யப் பழகிமற் றதையுஞ் சேர்த்துப்
பொருதென வுணர்த்துஞ் சேயோன் பூரணப் பொருளே யன்றே. .. 6
பரநினை வதுவே ஞானப் பார்வையாத் திளைக்கு மந்தப்
பரநினை வில்லா வெல்லாம் பாசத்தி னினைவே யென்றும்
பரநினை வுதித்தாற் பாச நினைவது பாறு மென்றும்
புரையற வுணர்த்துஞ் சேயோன் பூரணப் பொருளே யன்றே. .. 7
பாசமா நினைவே தோன்று பகலென்று மதனை நீங்கி
ஆசுறு மலத்தி லாழ்த லறிவிலா விரவே யென்றுந்
தேசிலா விரண்டு நீத்த திரம்பர நினைவே யென்றும்
பூசகர்க் குணர்த்துஞ் சேயோன் பூரணப் பொருளே யன்றே. .. 8
இத்திரம் வாய்க்கு மானா லிருவினை நீங்கி மோன
முத்திரை யதனி னின்றே முத்தியை யடைவா ரல்லார்
எத்திரத் தானுஞ் சேரா ரென்பது தீர்க்க மென்று
புத்தியி லுணர்த்துஞ் சேயோன் பூரணப் பொருளே யன்றே. .. 9
கருத்தடங் காதார் ஞானங் கதைப்பது கருத்தி லாதான்
நெருப்பெனப் பொறித்த வேட்டை நேரடுப் பிடவைத் தூது
தரத்தினைச் சிவணு மென்றோர் பவராரி தாதா தேடும்
பொருப்பினா மத்தா னாள்சேய் பூரணப் பொருளே யன்றே. .. 10

Pamban Swamigal Tiruppaliezhuchi Trust Document (Reg no: 98/2024)