நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »பொது பாடல்கள்
பொது பாடல்கள்
| வரி எண். | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
|---|---|---|---|
| அறுமுகச் சிவபுராணம் | |||
| பலன் | முருகப்பெருமானுக்கு சிவபுராணம் பாட வேண்டுமா?
|
||
அறுமுகச் சிவபுராணம்
ஓம் சரவணபவ வாழ்க சண்முகன் தாள்வாழ்க
இரவும் பகலும் என் இதயத்தான் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
குருவாயெழுந்தருளும் குமாராய நம வாழ்க
திருவார் குமரத் திருவுருவம் தான் வாழ்க
வெஞ்சூர் தடிந்த வெற்றிவேல் மிக வாழ்க
செஞ்சதங்கைத் திருவடிசேர் சீரார் மயில் வாழ்க
கொக்கறுகோ வெனக் கூவும் கோழிக்கொடி வாழ்க
சக்கரம் கைக்கொண்டான் தன்மருகன் தாள் வாழ்க
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் கானக் குறமகளாம்
வள்ளிக்கொடி வழ்க வானவர் கோனீந்த
தெய்வப்பிடி வாழ்க திருவருளான் தாள் வாழ்க
உய்யக் கொண்டருளும் ஓராறுமுகம் வாழ்க
படைகளைத் தாங்கியருள் பன்னிரண்டு தோள்வாழ்க
விடையவன் களிக்கும் விமலக் கவின்வாழ்க
அறசமயத் தெய்வமாய் அருளும் அருள் போற்றி
குருமனிவர்க் கருளிய குறைவிலாக் குணம் போற்றி
நான்முகனைக் கடிந்த நாதனருள்போற்றி
மான்மழுவனுக்குமருள் மன்னன் அடிபோற்றி
வேங்கை மரமான விமலன் அடிபோற்றி
தேன்கைத் தினைமாவின் தேவ னருள்போற்றி
தேவர்களைச் சிறைமீட்ட சேந்தன் திறம்போற்றி
மூவர்க்கு மேலாய முருகின் மணம்போற்றி
ஓங்காரமாக ஒளிரும் பதம்போற்றி
நீங்காத சத்திவேல் நிமலன்தன் நேர்போற்றி.

Pamban Swamigal Tiruppaliezhuchi Trust Document (Reg no: 98/2024)